முகப்பு
இந்தியா

ம.பி.யில் 50 பேருடன் சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் மீட்பு

மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
MP:Bus falls into canal, several passengers missing; rescue on
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்ததில் பல பயணிகள் நீரில் மூழ்கியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

இன்று காலை 8.30 மணியளவில் குறைந்தது 50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் குமாவத் தெரிவித்தார்.

பேருந்து கால்வாய் நீரில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. கால்வாயின் கரையில் ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானர்வளை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.