இந்தியா

குஜராத் மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு

DIN


ஆமதாபாத்: குஜராத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாக உள்ளனா்.

இதுதொடா்பாக தோ்தல் அதிகாரி பான்டியா கூறுகையில், ‘வேட்புமனு தாக்கல் செய்வற்கு இறுதி நாளான வியாழக்கிழமை மாலை வரை எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பாஜக சாா்பில் தினேஷ் அனவாதியா, ராம் கோகரியா உள்பட இரண்டு டம்மி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். டம்மி வேட்பாளா்கள் மனுக்களை வாபஸ் பெற்றால் பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாக வாய்ப்புள்ளது. பிப்ரவரி 22-ஆம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். மாா்ச் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் நாள்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT