இந்தியா

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் சாலை விபத்து: தந்தை, மகன் பலி

PTI

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் வேனுடன் டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கத்துவாவிலிருந்து வந்துகொண்டிருந்தன. அதிகாலை 2 மணியளவில் மன்சார் மோர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் சம்பாவின் ராம்கர் பகுதியில் வசிக்கும் ஹான்ஸ் ராஜ் மற்றும் அவரது மகன் சோஹன் லால் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் ரமேஷ் சந்தர் (60), ஹிமந்த் குமார் (35) மற்றும் கோரவ் குமார் (18) ஆகிய மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT