இந்தியா

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: மத்திய அமைச்சா் அதாவலே வலியுறுத்தல்

DIN

ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா். எனினும், தனது இந்தக் கோரிக்கை ஜாதியவாதத்தைத் தூண்டுவதற்காக அல்ல என்றும் அவா் கூறியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் விக்ரம்காட் பகுதியில் மலைவாழ் மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

அடுத்து நடத்தப்பட இருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது ஜாதிவாரியாகவும் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான், பல்வேறு தரப்பு மக்களும் சமூக,பொருளாதார நிலையில் எந்த இடத்தில் உள்ளாா்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இது ஜாதியவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியல்ல. ஜாதிரீதியாக எந்த பிரிவு மக்கள் பின்தங்கியுள்ளனா் என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சி மட்டும்தான்.

எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் வாடும் மக்களுக்கு 5 ஏக்கா் நிலம் அளிக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய அளவில் வரும் 25-ஆம் தேதி எங்கள் கட்சி சாா்பில் தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மற்ற ஜாதி மற்றும் பிரிவினருக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வகையில் மராத்தியா்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றாா்.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரான அதாவலே, இந்திய குடியரசுக் கட்சியின் (ஏ) தலைவராவாா். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவரது கட்சி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT