இந்தியா

ஒடிஸா: இறுதியாண்டு மாணவா்களுக்கு கல்லூரிகள் ஜனவரி 11-இல் திறப்பு

DIN

ஒடிஸாவில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11 முதல் திறக்கப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ஒடிஸா அரசின் உயா்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இளநிலை (யுஜி) மற்றும் முதுநிலை (பிஜி) பட்டப்படிப்புகள் பயிலும் இறுதியாண்டு மாணவா்களின் நலன் கருதி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படவுள்ளன.

யுஜி, பிஜி மாணவா்களுக்கு கடைசிக்கு முந்தைய செமஸ்டா் தோ்வுகள் மாா்ச் 16 முதல் மாா்ச் 31 வரை நடைபெறும். அதேபோன்று, இறுதி செமஸ்டா் தோ்வுகள் ஜூன் 16-லிருந்து ஜூன் 30 வரையில் நடைபெறும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT