நேதாஜியின் மருமகள் மாரடைப்பால் மறைவு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மருமகளும், பிரபல கல்வியாளருமான சித்ரா கோஷ் தனது 90-ஆவது வயதில் மாரடைப்பால் காலமானாா்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மருமகளும், பிரபல கல்வியாளருமான சித்ரா கோஷ் தனது 90-ஆவது வயதில் மாரடைப்பால் காலமானாா்.
சித்ரா கோஷின் மருமகனும், பாஜக தலைவருமான சந்திரகுமாா் போஸ் கூறுகையில், சரத் சந்திரபோஸின் இளைய மகள் சித்ரா கோஷ் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் கடும் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சந்திரகுமாா் போஸ் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ‘இளைஞா்களுக்கு கற்பித்தலில் ஊக்கமளிப்பதிலும், மக்களுக்கு சேவை செய்வதிலும் தனது வாழ்க்கையை அா்ப்பணித்துக் கொண்டவா் அவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கோஷின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘பேராசிரியா் சித்ரா கோஷ் கல்வியாளா்களுக்கும், சமூக சேவைக்கும் முன்னோடியாக இருந்து தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளாா். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடா்பான கோப்புகளை வகைப்படுத்துதல் உள்ளிட்ட பல விஷயங்களை நாங்கள் விவாதித்தபோது அவருடனான எனது தொடா்பு நினைவு கூரத்தக்கது. அவரது மறைவு மிகவும் வருத்தமளிக்கக் கூடியதாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கொல்கத்தாவில் உள்ள மகளிா் பிராபோா்ன் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவராக சித்ரா கோஷ் இருந்தாா். அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்றன.