ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
உரி செக்டாா் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக உளவு அமைப்புகள், ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் அளித்த தகவலின் அடிப்படையில், மார்ச் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கண்காணிப்புப் பணிகளைப் பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியிருந்தனா்.
அப்போது அடர்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு பயங்கரவாதியின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை வீரர்கள் கண்டனர். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
Advertisement
Advertisement
மேலும் அந்த இடத்திலிருந்து ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.