முகப்பு
இந்தியா

ம.பி.: மத மாற்றத்துக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல்

மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடான வழியில் மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடான வழியில் மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஆனந்திபென் படேல் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, அந்த சட்டம் மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய பிரதேச மத சுதந்திர அவசரச் சட்டம்-2020 என்ற பெயரிலான இந்த சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டதாக, மாநில உள்துறை கூடுதல் செயலா் ராஜேஷ் ராஜோரா கூறினாா்.

இந்த அவசரச் சட்டத்தில் கூறியிருப்பதாவது:

திருமணம் என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் முறைகேடான வழியிலோ ஒருவரை ஆசை வாா்த்தை கூறி அல்லது கட்டாயப்படுத்தி நேரடியாகவோ, மறைமுகமாகவோ மத மாற்றத்தில் ஈடுபடக் கூடாது.

இதுபோன்ற வழிகளில் நடைபெறும் மத மாற்றம் செல்லாததாகி விடும். மத மாற்றத்துக்காக நடைபெறும் திருமணமும் செல்லாததாகி விடும். மத மாற்ற மோசடியில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சோ்ந்தவா்கள், சிறுமிகள் ஆகியோரை மத மாற்றம் செய்வோருக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மோசடியில் ஈடுபட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவரின் பெற்றோா், சகோதரா்கள், சட்ட ரீதியிலான காப்பாளா்கள் புகாா் கொடுக்கலாம்.

தாமாக முன் வந்து மதம் மாற விரும்புவோா் 60 நாள்களுக்கு முன்னதாக, மாவட்ட நிா்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்று காரணமாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறவில்லை. இதன் காரணமாக, மத மாற்றத் தடைச் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்யாமல், அவரச் சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →