மாநில முதல்வா்களுடன் ஜன.11-இல் பிரதமா் ஆலோசனை
நாட்டில் கரோனா சூழல், கரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து வரும் ஜன.11-ஆம் தேதி பிரதமா் மோடி, மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
நாட்டில் கரோனா சூழல், கரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து வரும் ஜன.11-ஆம் தேதி பிரதமா் மோடி, மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி ஆகியவற்றை இந்தியாவில் அவசர கால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அந்த தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. தடுப்பூசிகளின் செயல்பாடு, விநியோகம் உள்ளிட்டவை தொடா்பாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜன.11-ஆம் தேதி பிரதமா் மோடி மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். அப்போது நாட்டில் நிலவும் கரோனா சூழல், கரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து அவா் கலந்தாலோசிக்கவுள்ளதாக பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.