தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்) 
இந்தியா

தில்லியில் பறவைகளை தருவிக்கத் தடை: கேஜரிவால்

தில்லியில் கோழி உள்ளிட்ட பறவைகளை கொண்டுவருவதற்கு தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

DIN

தில்லியில் கோழி உள்ளிட்ட பறவைகளை கொண்டுவர தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் கடந்த 2 முதல் 3 நாள்களாக 200க்கும் அதிகமான பறவைகள் இறந்துள்ளன. மத்திய உயிரியல் பூங்காவில் காகம் உள்ளிட்ட பறவைகளும் அடுத்தடுத்து இறந்து வருகின்றன.

இதனால் பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜரிவால், ''பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பரிசோதனை முடிவுகள் வெளியாகும். பறவைக் காய்ச்சல் பரவி வரும் சூழலில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்து வருகிறது.

இதனால் தில்லி நகருக்குள் பறவைகளை கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. காஸிப்பூர் பண்ணை அடுத்த 10 நாள்களுக்கு செயல்படாது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT