முகப்பு
இந்தியா

திரிபுராவில் பறவைக் காய்ச்சல் இல்லை: அரசு உறுதி

திரிபுராவில் பறவைக் காய்ச்சல் இல்லை என்று அம்மாநில விலங்குகள் நல வாரியம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
திரிபுராவில் பறவைக் காய்ச்சல் இல்லை: அரசு உறுதி
பகிர்:

திரிபுராவில் பறவைக் காய்ச்சல் இல்லை என்று அம்மாநில விலங்குகள் நல வாரியம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

பிசல்கார் மற்றும் உதய்பூர் பகுதியில் கோழி இறந்ததைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பரவிய புரளியைத் தொடர்ந்து அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திரிபுராவில் இது தொடர்பாக பேசிய சமூக நலம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டு அமைச்சர் சந்தனா சக்மா, பாக்டீரியா தொற்று காரணமாக கோழி இறந்ததாகக் கூறினார்.

பிசல்கார் மற்றும் உதய்பூர் பகுதிகளில் கோழி இறந்ததால் மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

கோழிகளில் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில் கோழி பாக்டீரியாவால் இறந்ததாக தெரியவந்துள்ளது.

பறவைக் காய்ச்சல் எதிரொலியால் அசாம் - திரிபுரா எல்லைகளில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திலுள்ள பண்ணைகளையும் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →