முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 96.42%: சுகாதாரத்துறை

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 96.42%: சுகாதாரத்துறை (கோப்புப்படம்)
பகிர்:

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனினும் அரசின் பல்வேறு நடவடிக்கையால் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது.

ஜனவரி 10-ஆம் தேதி வரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

Advertisement

இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 83.33 சதவிகிதமாகவும், ஆகஸ்ட் மாதம் 76.63 சதவிகிதமாகவும், ஜூலை மாதம் 64.55 சதவிகிதமாகவும் இருந்தது.

தற்போது நாட்டில் ஒரே நாளில் 18,645 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,04,50,284- ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 201 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,50,999 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments