முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மரத்தில் கட்டிவைத்து இளைஞர் எரிப்பு

ஒடிசாவில் அங்குல் மாவட்டத்தில் 25 வயது இளைஞர் அவரது உறவினர்களால் எரிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசாவில் அங்குல் மாவட்டத்தில் 25 வயது இளைஞர் அவரது உறவினர்களால் எரிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். 

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை ஹண்டபா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கடலிமுண்டா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. 

முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் ராஜ் கிஷோர் பிரதான் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இவர் அடிக்கடி மது அருந்தியதாகவும், குடிபோதையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், மோசமாக நடந்துகொள்வதை விரும்பாத உறவினர்கள் இளைஞரை மரத்தில் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். 

கிஷோர் பிரதானின் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →