இந்தியா

பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 382 பறவைகள் இறப்பு

DIN

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நாளில் மட்டும் 382 பறவைகள் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

கேரளாவைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் பறவைக் காய்ச்சலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் நேற்று (ஜன. 14) ஒரு நாளில் மட்டும் 382 பறவைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால் மகாராஷ்டிரத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் இதுவரை 2,378 பறவைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT