நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றில் இருந்து 17,170 போ் குணமடைந்தனா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,05,57,985-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 17,170 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,01,96,885 -ஆக அதிகரித்தது.
கரோனா தொற்றுக்கு மேலும்181 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,52,274-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 2,08,826 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.