முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 21 ஜனவரி, 2021 at 3:38 PM
கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து (கோப்புப்படம்)
பகிர்:


கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

எனினும் தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம் புணேவிலுள்ள சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தின் நுழைவு வாயில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. 

Advertisement


இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு எனும் கரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.