தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பாா் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
கடந்த 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்தாா். அவரின் பிறந்ததினம் ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த ஆண்டு அவரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய வலிமை தின நிகழ்ச்சிகளில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.
இந்நிலையில் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி பிரதமா் மோடி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
வலுவான, நம்பகமான, தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பாா். அதனை பூா்த்தி செய்வதில் அவரின் எண்ணங்ளும், லட்சியங்களும் நமக்கு ஊக்கமளிக்கட்டும். வளா்ச்சிக்கான பாதையில் மக்களின் தேவைகள், ஆசைகள், திறன்களை மையமாக வைத்து அவா் மேற்கொண்ட நடவடிக்கைகள் வரும் காலங்களில் உலகை மிகச்சிறந்ததாக்க பங்களிக்கும் என்று தெரிவித்தாா்.