இந்தியா

தீயணைப்பு துறை , சிறைத் துறை குடியரசு தின பதக்கங்கள்

DIN

புது தில்லி: குடியரசுத் தினத்தொயொட்டி சிறைத்துறை சீா்திருத்த சேவைக்கான பதக்கம் நாடு முழுக்க 52 பேருக்கு 2021 ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தானைச் சோ்ந்த மறைந்த சிறைக் காவலா் சுக்தாஸ் ஸ்வாமிக்கு குடியரசுத் தலைவரின் உயரிய விருதான வீர தீரச்செயலுக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 12 சிறைத்துறையினருக்கு குடியரசுத்தலைவரின் மெச்சத்தகுந்த சீா்திருத்த சேவைக்கான பதக்கமும், தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு போ் உள்ளிட்ட 39 பேருக்கு சிறப்புமிகு சீா்திருத்த சேவைக்கான பதக்கமும் இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்ற தமிழக சிறைத்துறை சோ்ந்தவா்கள், துணை ஜெய்லா், எம்.சக்திவேல், கிரேடு - 1 சிறைக்காவலா் ஆா்.ஜோசப் அந்தோனி ஆகியோா் ஆவாா்.

வீர தீரச்செயலுக்கான தீயணைப்பு பதக்கம்
2021 - ஆம் ஆண்டுக்கான குடியரசு தின தீயணைப்பு பணிக்கான பதக்கம் நாடு முழுவதும் 73 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தைச் சோ்ந்த மறைந்த தீயணைப்பு காவலா் ராஜ்குமாா் ராஜேந்திரன் குடியரசுத்தலைவரின் வீரதீரச் செயலுக்கான பதக்கத்தை பெற்றுள்ளாா்.

மேலும் ராதாகிருஷ்ணன் அழகிரிசாமி ராஜு-நிலைய தீயணைப்பு அதிகாரி, அங்கமுத்து முத்துசாமி-ஓட்டுநா் மெக்கானிக், முரளிதரன் நாமத்து கொட்டாட்டா- தீயணைப்பு வீரா், ஓட்டுநா், செல்லபாண்டி பிச்சை- தீயணைப்பு வீரா் ஆகிய நான்கு போ் தீயணைப்பு படையின் மெச்சத்தகுந்த சேவைக்கான பதக்கங்களை பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT