முகப்பு
இந்தியா

காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு: 4 வீரர்கள் காயம்

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் நான்கு வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2021 at 2:35 PM
4 soldiers injured in Kashmir terror attack (Ld)
பகிர்:

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் நான்கு வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குல்காமில் உள்ள கானபாலில் ஷம்சிபுராவின் பொதுப் பகுதியில் இன்று காலை 10.15 மணியளவில் ராணுவ வீரர்கள் சாலை திறப்பு விருந்தில் பங்கேற்றபோது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த பயங்கரவாத தாக்குதலில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீநகரில் உள்ள இராணுவத்தின்-92 அடிப்படை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

Advertisement

தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்கக் கூடுதல் படை சம்பவ இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.