முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,34,325 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,829 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்றில் இருந்து 212 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,21,995 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,501 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →