மேற்கு வங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் 
இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் திரிணமூல் அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் திரிணமூல் அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாள்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகளும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசு வியாழக்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்க அரசின் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக வேளாண் சட்டங்களை எதிர்த்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை” எனத் தெரிவித்தார்.  

முன்னதாக பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT