மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையிலும் அவர் தாக்கல் செய்தார்.
அதில் நடப்பாண்டில் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு இது 11.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
Advertisement
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்த பிறகு நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியம் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையும் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.