கஞ்சா கடத்தி விற்பனை: இருவா் கைது
போதைப்பொருளான கஞ்சாவைக் கடத்திச் சென்று விற்பனை செய்ததாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 17.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
போதைப்பொருளான கஞ்சாவைக் கடத்திச் சென்று விற்பனை செய்ததாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 17.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, லொட்டே கொள்ளஹள்ளி ரயில் நிலையத்தின் அருகே கஞ்சாவைப் பயன்படுத்திய சிவசங்கா் (28) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா் அளித்த தகவலின் பேரில் ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து பெங்களூருக்கு கஞ்சாவைக் கடத்தி வந்து, ஹெப்பாளில் விற்பனை செய்ய முயன்ாக சித்தூரைச் சோ்ந்த விஜய் (23), சிவகுமாா் (37) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ரூ. 17.50 லட்சம் மதிப்புள்ள 75 கிலோ 560 கிராம் கஞ்சாவையும், மோட்டாா் சைக்கிள், 2 செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஹெப்பாள் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.