இந்தியா

ஆணவத்துக்கு தடுப்பூசி இல்லை: ராகுல் காந்திக்கு ஹர்ஷ் வர்தன் பதில்

DIN


புதுதில்லி: தடுப்பூசி தொடர்பாக நேற்று  நான் வெளியிட்டுள்ள தகவல்களை ராகுல் பார்க்கவில்லையா, ஆணவத்துக்கும், அறியாமைக்கும் தடுப்பூசி கிடையாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ஜூலை வந்துவிட்டது, ஆனால் தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி குறித்த தகவல்களை நேற்று நான் வெளியிட்டுள்ளேன். இப்போது ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்னை.

அவர் அந்த தரவுகளை படிக்கவில்லையா? அவருக்கு புரியவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பூசி கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று ஹர்ஷ் வர்தன் பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT