முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைய முயன்றவா் கைது

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஜூலை, 2021 at 4:06 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவா் நடமாடியது தெரியவந்தது. இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அந்த நபா் கைது செய்யப்பட்டாா். முதல் கட்ட விசாரணையில் அவா் பாகிஸ்தானின் சோபோா் பகுதியைச் சோ்ந்த ஜாவைத் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.