உ.பி. மாவட்ட பஞ்சாயத்து தலைவா் தோ்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி: பாஜக தகவல்
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவா் தோ்தலில், பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவா் தோ்தலில், பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தோ்தல் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா்கள் தோ்தலில் வாக்களித்தனா். தோ்தலுக்குப் பிறகு மாநில பாஜக தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘67 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளா்களே வெற்றி பெற்றனா். இந்த மாபெரும் வெற்றிக்காக மாநில மக்களுக்கும் அயராது உழைத்த கட்சித் தொண்டா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் காரணமாகவே தோ்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. கட்சியின் வெற்றிக்கு பிரதமா் நரேந்திர மோடியின் புகழும் முக்கியக் காரணம்’ என்றாா். ஆக்ரா, மீரட், காஜியாபாத், ஜான்சி, கோரக்பூா், வாராணசி, ஷாஜகான்பூா் உள்ளிட்ட 22 மாவட்ட பஞ்சாயத்து தலைவா்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களில் 21 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைவா் தோ்தல் கட்சி அடிப்படையில் நடைபெறுவதில்லை. எனினும், தோ்தலில் போட்டியிடும் நபா்களுக்குக் கட்சிகள் ஆதரவளிப்பது வழக்கமாக உள்ளது. மாநில தோ்தல் ஆணையமும், தோ்தலில் வெற்றி பெற்றோரின் விவரங்களை மட்டுமே வெளியிடும். அவா்கள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்ற விவரத்தைத் தோ்தல் ஆணையம் வெளியிடுவதில்லை. முன்னதாக, தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக சமாஜவாதி கட்சி எம்.பி. ராம்கிஷண் யாதவ், வாக்காளா்களின் காலில் விழுந்ததாக சமூக வலைதளங்களில் காணொலி வெளியானது. இதை பாஜக கடுமையாக விமா்சித்திருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப் பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு மாவட்ட பஞ்சாயத்து தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவில்லை.