முகப்பு
இந்தியா

போதைப் பொருள்கள் விற்பனை: நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா் கைது

போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நைஜீரியாவைச் சோ்ந்தவா் டெம்பா ஐசக் (42). பெங்களூரில் தங்கியிருந்த இவா், ஹுலிமாவு தொட்டகம்மனஹள்ளி பல் மருத்துவமனை அருகே போதைப்பொருள்களான எம்டிஎம்ஏ, எக்ஸ்டஸியை விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று டெம்பா ஐசக்கை கைது செய்து, 25 கிராம் எம்டிஎம்ஏ, 4 கிராம் எடையுள்ள 9 எக்ஸ்டஸி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ஹுலிமாவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.