கொல்கத்தாவில் திரையரங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் லேக் நகரில் உள்ள ஜெயா திரையரங்கல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 15 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிவரவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயா திரையங்கு மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.