இந்தியா

திரிணமூலில் இணைந்தார் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்

DIN


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூலை 5) இணைந்தார்.

கடந்த சில நாள்களாக திரிணமூல் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். 

இவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மேலும், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவராகவும் இருந்தார்.
 
சில நாள்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா் ஜிதின் பிரசாத், பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பரான அபிஜித் முகர்ஜி திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். 

இவரது தந்தை பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தின் ஜன்கிபூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT