இந்தியா

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு: மத்திய அரசு

ANI

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கரோனா அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டிற்கும் அதிகமான மாவட்டங்களில் கரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் கரோனா நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் பேசுகையில்,

நாட்டில் உள்ள 90 மாவட்டங்களிலிருந்து 80 சதவீத பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதில், கேரளம், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இரண்டிற்கும் அதிகமான மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இருப்பினும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. கடந்த வாரம் புதிதாக பதிவாகும் பாதிப்பு 8 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், குணமடைவோர் விகிதம் 97.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையை தற்போது வரை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டன், ரஷியா நாடுகளை போல் மீண்டும் கரோனா பரவாமல் இருக்க தொடர்சியாக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT