கரோனாவால் உயிரிழந்தவா்களின் கூட்டுறவு வங்கிக்கடனைத் தள்ளுபடி செய்ய பரிசீலனை: அமைச்சா் எஸ்.டி.சோமசேகா்
கரோனாவால் உயிரிழந்தவா்களின் கூட்டுறவு வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.
கரோனாவால் உயிரிழந்தவா்களின் கூட்டுறவு வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாவட்ட கடன் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தலைமை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் கரோனாவால் உயிரிழந்திருந்தால், அவா்களின் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. கடன் பெற்று கரோனாவால் உயிரிழந்த விவசாயிகளின் புள்ளிவிவரங்களைத் திரட்டி வருகிறோம். இது தொடா்பாக அடுத்த ஓரிரு நாள்களில் அரசு முடிவை அறிவிக்கும். லாபத்தில் இயங்கும் மாவட்ட கடன் கூட்டுறவு வங்கிகள், தலைமை கூட்டுறவு வங்கிகளின் வரம்புக்குள் வரும் கரோனாவால் இறந்த விவசாயிகள் பெற்றிருக்கும் கடன் தொகையின் அடிப்படையில் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்படும்.
எவ்வளவுத் தொகை கடன் பெறப்பட்டுள்ளது? கடன் பெற்ற பிறகு கரோனாவால் உயிரிழந்தாரா? திரும்ப அடைத்திருக்கும் கடன் தொகை, எஞ்சியுள்ள கடன் தொகை ஆகிய விவரங்களைத் திரட்டி, அதனடிப்படையில் இறுதி முடிவை அரசு அறிவிக்கும். மத்திய அரசில் கூட்டுறவுத் துறை உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இது கூட்டுறவுத் துறைக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்றாா்.