வாடகை வாகன ஓட்டிகள் கரோனா உதவித்தொகை பெற ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா இரண்டாவது அலையின்போது வணிக நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 3,000 உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மே 27-ஆம் தேதி முதல் பலரும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வருகிறாா்கள். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிடுவதற்கு ஜூலை 15-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களைப் பதிவிட வேண்டும். விண்ணப்பங்களைச் செலுத்திய தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் அவா்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் வாகன ஓட்டுநா்களை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.