சுற்றுலாத் தலங்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை 
இந்தியா

‘சுற்றுலாத் தலங்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை’: சுகாதாரத்துறை

சுற்றுலாத் தலங்களில் கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் இருப்பது கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ANI

சுற்றுலாத் தலங்களில் கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் இருப்பது கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டின் கரோனா நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரி வி.கே.பால் பேசுகையில்,

நாட்டில் புதிய அபாயம் எழுந்துள்ளது. சுற்றுலாத் தலங்களில் கூட்டம் கூட்டமாக முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் மக்கள் செல்வது கவலை ஏற்படுத்துகிறது.

மேலும், கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நெறிமுறைகளை மத்திய அமைச்சகம் வழங்கியுள்ளது. மூன்று தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு செலுத்த அங்கிகரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியமானது.

இந்தியாவில் லாம்டா வகை கரோனா  அதிகாரப்பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம்! - முதல்வா் என்.ரங்கசாமி

பிரதமா் மலேசியாவில் தமிழ் கலாச்சாரத்தை புகழ்ந்தது மகிழ்ச்சி - குடியரசு துணைத் தலைவா்

கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்துக்கு அனைத்து நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து, செல்ல வேண்டும்! பயணிகள் கோரிக்கை!

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி: விழுப்புரம் வீரா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT