உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் 
இந்தியா

உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளத

ANI

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவமனை இயக்குர் பேராசிரியர் ஆர்.கே. திமான் தெரிவித்துள்ளார். கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளை இவர் நாள்தோறும் கண்காணித்து வருகிறார்.

அவர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். இதயவியல், நரம்பியல் உள்ளிட்ட பலதுறை மருத்துவ நிபுணர்கள், கல்யாண் சிங்கின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரான கல்யாண் சிங், உடல்நலக் குறைவால் கடந்த 4-ஆம் தேதி லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவா் மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT