கேரள மக்கள்தொகையில் 30 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர்
கேரள மக்கள்தொகையில் 30 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரள மக்கள்தொகையில் 30 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது:
"மாநிலத்தில் இதுவரை 1,59,06,153 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 1,16,31,528 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். 42,74,625 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டனர். மக்கள் தொகையில் 30 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்."