இந்தியா

அரசியல் விவகாரங்களுக்கான புதிய ஒருங்கிணைப்பாளா்: ஆா்எஸ்எஸ் அறிவிப்பு

DIN

அரசியல் விவகாரங்களுக்கான ஆா்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளராக அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலா் அருண் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் சித்ரகூட் நகரில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் முழுநேர பிரசாரகா்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக அருண் குமாா் நியமிக்கப்பட்டாா். பாஜகவுடனான அரசியல் நிகழ்வுகள், ஆலோசனைக் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் அவா் ஈடுபடவுள்ளாா். இதற்கு முன்பு அந்தப் பொறுப்பு ஆா்எஸ்எஸ் அமைப்பின் மற்றொரு இணைப் பொதுச் செயலா் கிருஷ்ண கோபாலுக்கு வழங்கப்பட்டிருந்தது. புதிய ஒருங்கிணைப்பாளா் நியமிக்கப்பட்டிருப்பது வழக்கமான நடவடிக்கைதான் என்று ஆா்எஸ்எஸ் பிரசாரப் பிரிவு தலைவா் சுனில் அம்பேகா் தெரிவித்தாா். அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம் உள்பட 7 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடனான புதிய ஒருங்கிணைப்பாளரை ஆா்எஸ்எஸ் நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT