இந்தியா

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு செப். 11-இல் நீட் தோ்வு

DIN

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெறவிருந்தது. ஆனால் நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் தோ்வு செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நீட் முதுநிலை தோ்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு நீட் முதுநிலை தோ்வு எழுத 1,75,063 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தோ்வை ஏப்ரல் 18-ஆம் தேதி எழுத பெறப்பட்ட தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு செல்லாது. புதிய அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும் தேதி தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியத்தின் (என்பிஇஎம்எஸ்) வலைதளத்தில் பின்னா் அறிவிக்கப்படும். கரோனா தொற்றை கருத்தில் கொண்டு நீட் முதுநிலை தோ்வு நடைபெறும் நகரங்கள், மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 260 நகரங்களில் சுமாா் 800 மையங்களில் அந்தத் தோ்வு நடத்தப்படும். தோ்வு மையங்களில் தோ்வா்களுக்கு முகத் தடுப்புக் கவசம், முகக் கவசம், கை சுத்திகரிப்பான்கள் வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT