இந்தியா

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரியே நீடிக்கிறார்?

DIN

காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரியே நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள், பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. 

இதனிடையே காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மாற்றப்பட உள்ளதாக செய்திகள் பரவின. 

இந்நிலையில், மக்களவை  குழுத் தலைவர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை. இந்த அமர்வில் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியே மக்களவையில் காங்கிரஸ் தலைவராக இருப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT