முகப்பு
இந்தியா

நாட்டில் மொத்தம் 39.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக விவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34.97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
கோப்புப்படம்
பகிர்:


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34.97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி இதுவரை மொத்தம் 39.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக விவரம்

சுகாதாரப் பணியாளர்கள்: 

முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டவர்கள்: 1.02 கோடி பேர்
இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள்: 74.67 லட்சம் பேர்

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை: 1.77 கோடி பேர்
இரண்டு தவணை: 1.01 கோடி பேர்

18-44 வயதினர்:

முதல் தவணை: 11.80 கோடி பேர்
இரண்டு தவணை: 42.03 லட்சம் பேர்

45-59 வயதினர்:

முதல் தவணை: 9.60 கோடி பேர்
இரண்டு தவணை: 2.62 கோடி

60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்:

முதல் தவணை: 7.14 கோடி பேர்
இரண்டு தவணை: 2.97 கோடி பேர்

முழு கட்டுரையைப் படிக்க →