இந்தியா

உத்தரகண்டில் நிலச்சரிவு: சிறுமி உள்பட மூவர் பலி; மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சிறுமி உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காணாமல் போன பலரைத் தேடும்பணி நடைபெற்று வருகிறது. 

DIN

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காசியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிறுமி உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காணாமல் போன பலரைத் தேடும்பணி நடைபெற்று வருகிறது. 

உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் உத்தர்காசி மாவட்டத்தில் திடீரென பெய்த பெருமழையால் ஓரிரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிறுமி உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT