கேரளத்தில் ஜூலை 24, 25-ல் முழுப் பொதுமுடக்கம் 
இந்தியா

கேரளத்தில் ஜூலை 24, 25-ல் முழுப் பொதுமுடக்கம்

கேரள மாநிலத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

ANI

கேரள மாநிலத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கேரளத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 24, 25ஆம் தேதிகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். எவ்வித தளர்வுகளுமின்றி கடைபிடிக்கப்படும்.

மேலும், கரோனா பாதிப்பு சதவீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் வருகின்ற வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3 லட்சம் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT