கேரளத்தில் மேலும் 17,481 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் பதிவிட்டுள்ளது:
"கேரளத்தில் புதிதாக 17,481 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 105 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 15,617 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14,131 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,29,640 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 30,59,441 பேர் குணமடைந்துள்ளனர்."