கேரளத்தில் புதிதாக 17,518 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.
கேரளத்தில் புதிதாக 17,518 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 132 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 15,872 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 11,067 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதுவரை மொத்தம் 30,83,962 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பு விகிதம் 13.63% ஆக உள்ளது.