கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய முதல்வரை நியமிப்பது குறித்து பாஜக எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷான் ரெட்டி ஆகியோர் இன்று கேட்கவுள்ளனர்.
கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷான் ரெட்டி ஆகியோர் கர்நாடகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து புதிய முதல்வர்கள் குறித்த அவர்களது கருத்துகளை கேட்கவுள்ளனர். அதன்பிறகு தேசிய தலைமையுடன் ஆலோசித்து ஓரிரு நாள்களில் புதிய முதல்வர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் 75 வயதைக் கடந்தவா்கள் முக்கிய பதவிகளில் இருந்து விலகியிருக்கும் விதிமுறை உள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு கர்நாடக முதல்வராக 2019ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில், நேற்று ராஜிநாமா செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.