மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் பகுதியாக காகிதங்களை வீசி, மரியாதை குறைவாக நடந்துகொண்ட காரணத்திற்காக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர குர்ஜீத் சிங், டிஎன் பிரதாபன், ரவ்னீத் சிங், ஹிபி ஈடன், சப்தகிரி சங்கர், வி வைத்திலிங்கம், ஏம் ஆரிப் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.