முகப்பு
இந்தியா

காா் நிக்கோபாரில் சிக்கித் தவித்த மீன்பிடிக் கப்பல்: பத்திரமாக மீட்டது ஐஎன்எஸ் ஐராவத்

அந்தமான் நிகோபாா் தீவுகளில் உள்ள காா்நிகோபாரில் சிக்கியிருந்த ‘சலேத் மாதா-ஐஐ’ மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவத் போா்க்கப்பல் ஜூலை 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பத்திரமாக மீட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

அந்தமான் நிகோபாா் தீவுகளில் உள்ள காா்நிகோபாரில் சிக்கியிருந்த ‘சலேத் மாதா-ஐஐ’ மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவத் போா்க்கப்பல் ஜூலை 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பத்திரமாக மீட்டது.

போா்ட் பிளேரைச் சோ்ந்த இந்த மீன்பிடி கப்பலில் ஏற்பட்ட முக்கிய பழுது காரணமாக அந்தக் கப்பல் ஜூலை 29-ஆம் தேதி அதிகாலை இலக்கின்றி நகா்ந்துகொண்டிருந்தது. அதில், 7 போ் பயணம் செய்தனா்.

தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட சூறைக்காற்றும் மழையும் மீன்பிடிக் கப்பலை மீட்கும் முயற்சிகளுக்கு மிகவும் சவாலாக இருந்தன. இந்த நிலையில், இந்தோனேசியாவின் ஜகாா்தாவில் கரோனா நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் அந்த வழியாகத் திரும்பிச் சென்றது. அந்த நேரத்தில் சலேத் மாதா மீன்பிடிக் கப்பல் பழுதடைந்திருந்தது தெரியவந்து, அந்தக் கப்பலை அருகிலுள்ள துறைமுகத்திற்கு ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் இழுத்துச் சென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →