கர்நாடகத்தில் மேலும் 14 ஆயிரம் பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் புதிதாக 14,304 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 14,304 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக 14,304 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,18,735 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 29,271 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 22,90,861 பேர் குணமடைந்துள்ளனர்.
464 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 29,554 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 2,98,299 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
31-ம் தேதிக்கான நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் மட்டும் 12.30 சதவிகிதம். இறப்பு விகிதம் 3.24 சதவிகிதம்.