ம.பி.யில் இளநிலை மருத்துவர்கள் போராட்டம்; அரசு எச்சரிக்கை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 6 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட
போபால்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 6 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கரோனா பாதித்தால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் தொடரும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.