கருப்பு பூஞ்சை: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி முன்வைக்கும் 3 கேள்விகள்!
கருப்பு பூஞ்சை தொற்றுநோய் குறித்து மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கருப்பு பூஞ்சை தொற்றுநோய் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாடு முழுவதும் அதிகரித்து வரும் மியூகோமைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோயை கையாள்வதற்கான முறைகள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மூன்று கேள்விகளையும் மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார்.
1. ஆம்போடெரிசின் பி மருந்து பற்றாக்குறைக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
2. நோயாளி ஒருவர் இந்த மருந்தைப் பெறுவதற்கான நடைமுறை என்ன? அவர் எப்படி பெறுவது?
3. சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, வழிமுறைகள் என்ற பெயரில் மக்கள் ஏன் தொந்தரவு செய்யப்படுகிறார்கள்?
என கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூற கோரியுள்ளார்.