முகப்பு
இந்தியா

'உங்கள் குரலால் மத்திய அரசை எழுப்புங்கள்' - இலவச தடுப்பூசி குறித்து ராகுல் கோரிக்கை!

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க  மக்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
ராகுல் காந்தி
பகிர்:

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க  மக்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையைவிட பன்மடங்கு பாதிப்பு, பன்மடங்கு உயிரிழப்புகள் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அந்தவகையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். 

இதனிடையே, மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கரோனாவுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக அவர் மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசி மட்டுமே கரோனா தொற்றுநோய்க்கு எதிரான வலுவான பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க மக்களாகிய அனைவரும் நீங்கள் குரல் எழுப்பி மத்திய அரசை எழுப்புங்கள்! என்று கூறியுள்ளார். 

இதற்காக #SpeakUpForFreeUniversalVaccination என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் தங்கள் கருத்துகளை பதிவிடுமாறு கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →